போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும்

வாகன ஓட்டிகளுக்கு டி.எஸ்.பி. அறிவுரை5 நபர்களுக்குதலா ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது
போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும்
Published on

செய்யாறு:

செய்யாறு டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜீவராஜ் மணிகண்டன், உதவி ஆய்வாளர்கள் சங்கர், கன்னியப்பன் உள்பட போலீசார் நேற்று ஆற்காடு சாலை அரசு கல்லூரி அருகே வாகன தணிக்கை செய்தனர்.

போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை நிறுத்தி, அனைவரும் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும், வாகனத்திற்குரிய ஆவணங்கள் கைகளில் வைத்திருக்க வேண்டும் என்றும், மது அருந்திவிட்டு வாகன ஓட்டக்கூடாது என்றும், டிஎஸ்பி வெங்கடேசன் அறிவுரை வழங்கி எச்சரித்து அனுப்பினார்.

அப்போது மது அருந்தி விட்டு வந்த 5 நபர்களுக்குதலா ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com