search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பைக் விபத்தில் விவசாயி பலி
    X

    கோப்புப்படம்

    பைக் விபத்தில் விவசாயி பலி

    • தலையில் பலத்த காயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதி
    • போலீசார் விசாரணை

    சேத்துப்பட்டு:

    பெரணமல்லூர் அடுத்த நகரந்தலை சேர்ந்தவர் தொப்பளான் (வயது 23). விவசாயி.

    இவர் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்குவதற்காக நேற்று முன்தினம் நகரந்தலில் இருந்து சேத்துப்பட்டுக்கு தனது பைக்கில் சென்றார். கடையில் இருந்து பொருட்களை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு செல்வதற்காக ஆரணி- சேத்துப்பட்டு சாலையில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் வந்த பைக் இவர் ஓட்டி வந்த பைக் மீது திடீரென மோதியது. இதில் தொப்பளான் பைக்கில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று தொப்பளான் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அவரது மகன் ராமலிங்கம் சேத்துப்பட்டு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தொப்பளான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி சென்ற பைக்கை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×