மாவட்ட அளவிலான தடகள போட்டி

கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
மாவட்ட அளவிலான தடகள போட்டி
Published on

வேங்கிக்கால்:

திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்கம் சார்பில் திருவண்ணா மலையில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் இன்று காலை மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் நடந்தது.

விழாவிற்கு மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் தலைமை தாங்கினார்.

கலெக்டர் பா.முருகேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றிவைத்து வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

தொடர்ந்து தடகள போட்டிகளை கொடிய சைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் பாலமுருகன், பெண்கள் விளையாட்டு விடுதி மேலாளர் சண்மு கப்பிரியா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

முன்னதாக மாவட்ட தடகள சங்க செயலாளர் புகழேந்தி வரவேற்றார். சங்க பொருளாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

இதில் ஏராளமான வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்கள் திறமை களை வெளிப்படுத்தினர்.

இன்று நடைபெற்ற போட்டிகளில் தேர்வு செய்யப்படும் வீரர் மற்றும் வீராங்கனைகள் வருகிற 14-ந் தேதி நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் மாநில அளவிலான தடகள போட்டிகளில் திருவண்ணா மலை மாவட்டத்தின் சார்பாக கலந்து கொள்வார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com