search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவண்ணாமலையில் கூட்டுறவு வார விழா
    X

    கூட்டுறவு விற்பனை இணைய மண்டல அலுவலக வளாகத்தில் கொடியேற்று விழா நடந்த காட்சி.

    திருவண்ணாமலையில் கூட்டுறவு வார விழா

    • இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது
    • கொடியேற்று விழா நடைபெற்றது

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நேற்று தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு திருவண்ணா மலையில்உள்ள தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய மண்டல அலுவலக வளாகத்தில் கொடியேற்று விழா நடைபெற்றது.

    கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் கோ.நடராஜன் தலைமை தாங்கினார். மத்திய கூட்டுறவுவங்கியின் இணைப்பதிவாளர் கா.ஜெயம் கூட்டுறவு கொடியை ஏற்றி கூட்டுறவு வார விழாவை தொடங்கி வைத்தார்.

    இதில் துணை பதிவாளர்கள் ராஜசேகரன், சித்ரா, செயலாட்சியர்கள் மீனாட்சிசுந்தரம், சுரேஷ்குமார், தீபன் சக்கரவர்த்தி, சார்பதிவாளர் விஜயகுமாரி, டான்பெட்மண்டல மேலாளர் சித்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு இன்று உறுப்பினர் சேர்க்கை மற்றும் கடன் மேளா நடைபெற உள்ளது.

    நாளை செங்கம்அடுத்த அந்தனூர் கிராமம் மற்றும் செய்யாறு அடுத்த கடம்பை ஆகிய கிராமங்களில் இலவச கால்நடைசிகிச்சை முகாம்கள் நடைபெறும். 17-ந் தேதி பொதுப்ப ணித்துறை அமைச்சர் எ.வ.வேலுதலைமையில் திருவண்ணாமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கூட்டுறவு வார விழா நடைபெறுகிறது.

    18-ந் தேதி திருவண்ணா மலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் கூட்டுறவு வார விழா கருத்த ரங்கம்ந டைபெறுகிறது. 19-ந் தேதி நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்நடைபெற உள்ளது.

    20-ந் தேதி திருவண்ணா மலை வேளாண் உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு சங்கம்மற்றும் செய்யாறு கிளை அலுவலகத்தில் ரத்த தான முகாம் நடைபெறும் என கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் கோ.நடராஜன் தெரிவித்தார்.

    Next Story
    ×