search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில் பூசாரியிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு
    X

    கோவில் பூசாரியிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு

    • மர்ம நபர் கைவரிசை
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த மழையூர் கூட்டு சாலையை சேர்ந்தவர் மகாதேவன் (வயது 55). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலில் பூசாரியாக உள்ளார். இந்த நிலையில் அவர் கோவிலில் பூஜைகளை முடித்துவிட்டு கோவிலில் இருந்து வெளியே வந்தார்.

    அப்போது மர்ம நபர் ஒருவர் மகாதேவனின் கழுத்தில் அணிந்து இருந்த 7 பவுன் செயினை பறித்து கொண்டு தப்பி ஓடினார். இதுகுறித்து மகாதேவன் வட வணக்கம் பாடி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×