search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    23 பவுன் நகை கொள்ளை
    X

    23 பவுன் நகை கொள்ளை

    • தனிப்படை போலீசார் தீவிர விசாரணை
    • கைரேகை தடயங்களை சேகரித்தனர்

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட் டம் ஆரணி அடுத்த நேத்தப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 65), சார்பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவரது மனைவி மரகதம்.

    நேற்று காலை 10.30 மணி அளவில் கணவன்-மனைவி இருவரும் வீட்டின் அருகே உள்ள கிறிஸ்தவ தேவாலயத் திற்கு வீட்டை பூட்டிவிட்டு சென்றி ருந்தனர். அந்த நேரத்தில் வீடுபுகுந்த கும்பல் 23 பவுன் நகைகளை திருடி சென்று விட்டது.

    இது குறித்து சண்முகம் ஆரணி தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பே ரில் துணை போலீஸ் சூப்பி ரண்டு ரவிச்சந்திரன், இன்ஸ் பெக்டர் (பொறுப்பு) சுப்பிர மணி, சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் மற்றும் போலீசார் அங்குவந்து விசாரணை நடத் தினர்.

    மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு சென்று கைரேகை தடயங்களை சேகரித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகைகளை திருடிச் சென்ற மர்ம கும்பலை இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தலைமையில் தனி படை அமைத்து தேடி வருகின்றனர்.

    பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×