search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமஞ்சனம் வழிபாடு
    X

    திருமஞ்சனம் வழிபாடு

    • வெங்கட்ரமணசாமி கோவிலில் திருமஞ்சனம் வழிபாடு நடந்தது.
    • பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    திருவாரூர்:

    திருவாரூர் கூத்தாநல்லூர் அருகே உள்ள சாத்தனூரில் வெங்கட்ரமணசாமி கோவில் உள்ளது.

    இக்கோவிலில் நேற்று சனிக்கிழமையையொட்டி திருமஞ்சனம் வழிபாடு நடைபெற்றது.

    அப்போது சாமிக்கு பால், தயிர், சந்தனம், தேன், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர் சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×