search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில் மளிகை கடையின் சுவரை உடைத்து ரூ.50 ஆயிரம் திருட்டு
    X

    கொள்ளையடிக்கப்பட்ட மளிகை கடை

    உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில் மளிகை கடையின் சுவரை உடைத்து ரூ.50 ஆயிரம் திருட்டு

    • பழனிவேல் நேற்று இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
    • எந்தெந்த பொருட்கள் காணாமல் போயுள்ளது என்பது குறித்து ஆய்வு நடத்தி வருகிறார்.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை அடுத்த பு.மாம்பாக்கத்தை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 43). இவர் உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில் மளிகை கடை வைத்துள்ளார். இவர் நேற்று இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றார்.

    இன்று காலை 8 மணியளவில் கடையை திறந்தார். கடைக்குள் சென்று பார்த்தபோது கல்லாப் பெட்டி உடைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்த ரூ.50 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த அவர் கடையை சுற்றிப்பார்த்தார். கடைக்குள் இருந்த சிகரெட் பாக்கெட்டுகள் திருடு போயிருந்தது. மேலும், எந்தெந்த பொருட்கள் காணாமல் போயுள்ளது என்பது குறித்து ஆய்வு நடத்தி வருகிறார்.

    இது தொடர்பாக கடை உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கடையின் பின்புற சுவரை துளையிட்டு உடைத்து கடையினுள் மர்ம நபர்கள் புகுந்து கொள்ளையடித்து சென்றதை போலீசார் கண்டறிந்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×