search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம்
    X

    நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் தபால் அட்டை அனுப்பப்பட்ட காட்சி.

    நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம்

    • 'நீட் விலக்கு நம் இலக்கு' என்ற பெயரில் கையெழுத்து இயக்கம் வள்ளியூரில் நடைபெற்றது.
    • கையெழுத்து இயக்கத்தை மாநில பிரசார குழு செயலாளர் சேலம் சுஜாதா தொடங்கி வைத்தார்.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி சார்பில் 'நீட் விலக்கு நம் இலக்கு' என்ற பெயரில் கையெழுத்து இயக்கம் வள்ளியூரில் நடைபெற்றது. நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். ஞானதிரவியம் எம்.பி., நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், அவைத்தலைவர் கிரகாம்பெல், கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜான் ரபீந்தர், மாணவரணி அமைப்பாளர் அலெக்ஸ் அப்பாவு, மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் கார்த்திக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில பிரசார குழு செயலாளர் சேலம் சுஜாதா கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதில் ஏராளமானோர் தங்களுக்கு வழங்கப்பட்ட அஞ்சல் அட்டையில் பெயர், செல்போன் எண், தங்களது முகவரியை எழுதி கையெழுத்திட்டு அதனை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பி னர் இரா.ஆ.பிரபாகரன், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர்கள் செல்வ கருணாநிதி, ஜோசப் பெல்சி, மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் செல்வசூடாமணி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அருள்ராஜ் டார்வின், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மல்லிகா அருள், ராதாபுரம் இளைஞரணி விஜயாபதி ரகுமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×