search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாய்பாபா காலனி மேம்பாலப்பணி அக்டோபரில் தொடங்குகிறது
    X

    சாய்பாபா காலனி மேம்பாலப்பணி அக்டோபரில் தொடங்குகிறது

    • போக்குவரத்து நெரிசலால் வாகனஓட்டிகள் தவிப்பதால் நடவடிக்கை
    • ரூ.46.61 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்ட ஒப்பந்தப்புள்ளி இறுதியாகிறது

    கோவை,

    கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகள் அக்டோபர் மாதத்தில் தொடங்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தெரிவித்தார்.

    கோவையில் நாளுக்கு நாள் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. மாநகரில் நெரிசலைக் கட்டுப்படுத்த முக்கிய சாலைகளில் மேம்பாலங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, திருச்சி சாலை ராமநாதபுரத்தில் ரூ.250 கோடியில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை ரூ.1621 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை மேம்பாலம் அமைக்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபா காலனி சந்திப்பில் அவ்வப்போது, போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தவிர்க்க முடியாமல் உள்ளது. இதனால், இப்பகுதியில் 1.14 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேம்பாலம் அமைக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் திட்டமிடப்பட்டு அதற்கான அனுமதியும் பெறப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக, நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், சாய்பாபா காலனி சந்திப்பில் மேம்பாலம் கட்ட மண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், தற்போது ரூ.46.61 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்ட ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்படும். அக்டோபர் மாதம் மேம்பாலப் பணிகளைத் தொடங்கிட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.

    Next Story
    ×