என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வீட்டில் இருந்து மாயமான பெண் கிணற்றில் பிணமாக மீட்பு
- சம்பவத்தன்று மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த சரோஜாவை, அவரது மகன்கள் கண்டித்து உள்ளனர்.
- இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த சரோஜா, கடந்த 15-ந் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி, குட்டை தெருவைச் சேர்ந்த வர் பழனிச்சாமி. இவரது மனைவி சரோஜா (வயது 48). கூலித்தொழிலாளி.
இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. சம்பவத்தன்று மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த சரோஜாவை, அவரது மகன்கள் கண்டித்து உள்ளனர்.
இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த சரோஜா, கடந்த 15-ந் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றார். ஆனால் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. காணாமல் போன சரோஜாவை அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர்.
இந்நிலையில் நேற்று வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்திற்கு பின்புறம் உள்ள கிணற்றில், அடையாளம் தெரியாத பெண்ணின் பிணம் மிதப்பதாக வேலகவுண்டம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பெண்ணின் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் இதுகுறித்து விசாரணை நடத்தியதில், கிணற்றில் இறந்து கிடந்தவர், வேல கவுண்டம்பட்டி, குட்டை தெருவைச் சேர்ந்த சரோஜா என்பது தெரியவந்தது.
சம்பவம் குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்