search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாயை கிண்டல் செய்த விவகாரத்தில் வாலிபரை விரட்டி தாக்கிய கும்பல்
    X

    நாயை கிண்டல் செய்த விவகாரத்தில் வாலிபரை விரட்டி தாக்கிய கும்பல்

    • சேலம் சின்னபுதூர் முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவரை நாயை கிண்டல் செய்த விவகாரத்தில் வாலிபரை தாக்கினார்.
    • இது குறித்து சந்தோஷ்குமார் அளித்த புகாரின்பேரில் அழகாபுரம் போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    சேலம்:

    சேலம் சின்னபுதூர் முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 27).

    இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நாயுடன் நடைப்பயிற்சி சென்றார். அப்போது அங்குள்ள டீக்கடையில் அமர்ந்திருந்த 5 பேர் 'இது பெண் நாய்' என கிண்டல் செய்தனர். இதனை சந்தோஷ்குமார் தட்டிக்கேட்டார்.

    இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென அந்த வாலிபர்கள், சந்தோஷ்குமாரை தாக்க முயன்றனர். அவர்களிடம் இருந்து ஓட்டம் பிடித்த சந்தோஷ்குமார் அந்த பகுதியில் உள்ள ஓட்டலுக்குள் நுழைந்தார்.

    அவரை துரத்தி சென்ற அந்த 5 பேரும் ஓட்டலுக்குள் புகுந்து அங்கிருந்த தோசை கரண்டியால் சந்தோஷ்குமாரை சரமாரியாக தாக்கினர். பின்னர் அங்கிருந்த ெபாதுமக்கள், அவர்களை விலக்கி விட்டனர். இதில் படுகாயம் அடைந்த சந்தோஷ்குமார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இது குறித்து சந்தோஷ்குமார் அளித்த புகாரின்பேரில் அழகாபுரம் போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    Next Story
    ×