search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியாறு புலிகள் சரணாலய பகுதியில் வன விலங்குகள் வேட்டையை தடுக்க வனத்துறையினர் தீவிர சோதனை
    X

    வன விலங்குகள் வேட்டையை தடுக்க வனத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்ட காட்சி.

    பெரியாறு புலிகள் சரணாலய பகுதியில் வன விலங்குகள் வேட்டையை தடுக்க வனத்துறையினர் தீவிர சோதனை

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு யானை தந்தம் கடத்தல், மான் கொம்பு கடத்தல் மான் இறைச்சி விற்பனை ஆகிய வழக்குகளில் 10 பேரை கேரள வனத்துறையினர் கைது செய்தனர்.
    • எனவே இதனை தடுக்கவும், வேட்டையாடுபவர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்கவும் கோட்டயம் மாவட்ட வன அலுவலர் ராஜேஷ் உத்தரவிட்டார்.

    கூடலூர்:

    தமிழக-கேரள எல்லை யில் சுமார் 925 ச.கீ. பரப்பளவில் கேரள மாநிலத்தின் இடுக்கி, பத்த னம்திட்டா மாவட்டங்களில் பெரியாறு புலிகள் சரணா லயம் அமைந்துள்ளது.

    இதையொட்டியுள்ள வனப்பகுதிகளில் அதிக அளவில் வன விலங்குகள் வேட்டை நடைபெற்று வருகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு யானை தந்தம் கடத்தல், மான் கொம்பு கடத்தல் மான் இறைச்சி விற்பனை ஆகிய வழக்குகளில் 10 பேரை கேரள வனத்துறையினர் கைது செய்தனர்.

    சரணாலயத்ைத ஒட்டி யுள்ள விளை நிலங்களில் அதிக அளவில் வன விலங்குகள் வேட்டை நடைபெற்று வருகிறது. எனவே இதனை தடுக்கவும், வேட்டையாடுபவர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்கவும் கோட்டயம் மாவட்ட வன அலுவலர் ராஜேஷ் உத்தரவிட்டார். மேலும் மாவட்ட வன அலுவலர் சந்தீப் மேற்பார்வையில் பறக்கும் படை வனத்துறை குழு அமைக்கப்பட்டது.

    அதன் ஒரு பகுதியாக குமுளி ரேஞ்சர் அணில்குமார் தலைமையில் வனத்துறை யினர் குழு வேட்டையாடுதல் தடுப்பு குழு, வன விலங்கு பாதுகாப்புக்குழு ஆகியோர் சரணாலய பகுதியை யொட்டி உள்ள தங்கமலை, தொண்டியாறு, மூலக்கயம், மாட்டுப்பட்டி ஆகிய பகுதிகளில் தீவிர சோதனை யில் ஈடுபட்டனர். வன விலங்குகள் வேட்டையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    வேட்டையில் ஈடுபடு பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

    Next Story
    ×