search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாளை மறுநாள் தொடங்குகிறது- நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 137 மையங்களில் பிளஸ்-2 தேர்வு
    X

    பாளை முருகன்குறிச்சியில் உள்ள தேர்வு மையத்தில் மேஜையின் மீது மாணவர்களின் ஹால் டிக்கெட் எண்கள் ஒட்டும் பணி நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.

    நாளை மறுநாள் தொடங்குகிறது- நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 137 மையங்களில் பிளஸ்-2 தேர்வு

    • நெல்லை மாவட்டத்தில் நாளை மறுநாள் தொடங்க உள்ள பிளஸ்-2 தேர்வுக்காக மொத்தம் 73 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
    • தேர்வு பணிகளில் சுமார் 1,500 ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர்.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை மறுநாள்(திங்கட்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 5-ந்தேதி வரை நடக்கிறது. இதனையொட்டி மாவட்டந்தோறும் தேர்வுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் நாளை மறுநாள் தொடங்க உள்ள பிளஸ்-2 தேர்வுக்காக மொத்தம் 73 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள் என மொத்தம் 184 பள்ளிகளை சேர்ந்த பிளஸ்-2 மாணவ, மாணவிகள் சுமார் 22 ஆயிரம் பேர் 69 மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.

    இதுதவிர பாளை மத்தியச்சிறை, சேரன்மகாதேவி டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மேல்நிலைப்பள்ளி, ஏர்வாடியில் தனியார் மெட்ரிக் பள்ளி, பாளை தனியார் பள்ளிகளில் 4 தனியார் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கும் தனித்தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

    பறக்கும் படை

    தேர்வையொட்டி வினாத்தாள்கள் சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்டு மாவட்டத்தில் 5 பள்ளிகளில் வைக்கப்பட்டு அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தேர்வு பணிகளில் சுமார் 1,500 ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர்.

    தேர்வு நாளன்று காலை 7 மணிக்கு வினாத்தாள்கள் போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் எடுத்து செல்லப்பட்டு தேர்வு மையங்களில் ஒப்படைக்கப்பட உள்ளது. இதற்காக 16 வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

    தேர்வில் முறைகேடுகள், தவறுகள் நடக்காமல் இருக்கும் வகையில் கண்காணிப்பு பணியில் 7 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதுதவிர நிலையான படையும் ஒவ்வொரு மையத்திற்கும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஏற்பாடுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி ஆய்வு செய்து வருகிறார்.

    தென்காசி

    தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை பிளஸ்-1 பொதுத்தேர்வை 16, 499 பேரும், பிளஸ்-2 தேர்வை 18,299 மாணவர்களும் எழுத உள்ளனர். இதற்காக 2 தனிதேர்வு மையங்கள் உள்பட மொத்தம் 64 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த 2 தேர்வுகளுக்காக 1,322 ஆசிரியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தனித்தேர்வு மையங்களில் சிறை கைதிகள் உள்பட பலர் தேர்வு எழுத உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் தலைமையில் கல்வித்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    கட்டுப்பாடுகள்

    தேர்வு எழுதும் மாணவர்களுக்கும், கண்கா ணிப்பு ஆசிரியர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வு அறைக்குள் செல்போன் உள்ளிட்ட மின் சாதனங்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட்டில் உள்ள விதிகளை மாண வர்கள் நிச்சயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×