search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோழி காணாமல் போன விவகாரம்  இரு தரப்பினர் மோதல் 3 பேர் காயம்- வாலிபர் கைது
    X

    கோழி காணாமல் போன விவகாரம் இரு தரப்பினர் மோதல் 3 பேர் காயம்- வாலிபர் கைது

    வீட்டு மனை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது.

    விழுப்பரம்:

    திருவெண்ணை நல்லூர் அருகே உள்ள டி. கொளத்தூரை சேர்ந்தவர் முருகன். விவசாயி.இவரது உறவினர் நாராயணன் (40). இருவரது வீடும் அருகருகே உள்ளது. இவர்கள் இருவருக்கும் வீட்டு மனை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது. முருகன் வீட்டில் வளர்த்து வந்த கோழிகள் அடுத்தடுத்து காணாமல் போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த முருகன் மனைவி மான்விழி வீட்டின் வெளியே வந்து திட்டியதாக கூறப்படுகிறது.அப்போது அங்கு வந்த நாராயணன் எங்கள் வீட்டை பார்த்து ஏன் திட்டுகிறீர்கள் என கேட்டுள்ளார். இதனால் இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியாக மாறியது. இதில் முருகன், அவரது மனைவி மான்விழி, நாராயணன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்க ப்பட்டுள்ளனர்.

    இது முருகன் அளித்த புகாரின் பேரில நாராயணன், வீரன், பிரபு (32)மற்றும் சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நாராயணன் அளித்த புகாரின் பேரில் முருகன், மான்விழி ஆகியோர் மீது திருவெண்ணை நல்லூர் சப்- இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்கு பதிவு செய்தார். இதில் பிரபுவை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×