

தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை எஸ்ஆர்ஓ தெருவில் வசித்து வருபவர் ஜெயக்குமார் (வயது52).
இவரது வீட்டில் ஆண்டுக்கு ஒருமுறையே பூக்கும் பிரம்ம கமலம் செடி நட்டு வளர்த்து வருகிறார். இரவு, பிரம்ம கமலம் பூத்து குலுங்கியது. ஒரே செடியில் 15-க்கும் மேற்பட்ட மலர்கள் பூத்து குலுங்குகிறது. அதனை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.