search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டுப்பாளையத்தில் தனியாக வசித்த தொழிலாளியின் உடல் அழுகிய நிலையில் மீட்பு
    X

    மேட்டுப்பாளையத்தில் தனியாக வசித்த தொழிலாளியின் உடல் அழுகிய நிலையில் மீட்பு

    • நடராஜ் இறந்து 5 நாட்களுக்கு மேல் இருக்கும் என்பதால் அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.
    • போலீசார் நடராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள அம்மன் நகரை சேர்ந்தவர் நடராஜ் (வயது 53). கூலித் தொழிலாளி. இவரது மனைவி பேபி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதனால் பேபி தனது கணவரை பிரிந்து தேவாலாவில் உள்ள பெற்றோர் வீட்டில் மகளுடன் வசித்து வந்தார். நடராஜ் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். சம்பவத்தன்று இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்தது.

    இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டிற்குள் நடராஜ் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் இறந்து 5 நாட்களுக்கு மேல் இருக்கும் என்பதால் அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.

    பின்னர் போலீசார் நடராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் நடராஜ் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×