search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாவூர்சத்திரம் அருகே மேகம் திரை கொண்ட சாஸ்தா கோவிலில் ஆடி மாத திருவிழா கோலாகலம்
    X

    பாவூர்சத்திரம் அருகே மேகம் திரை கொண்ட சாஸ்தா கோவிலில் ஆடி மாத திருவிழா கோலாகலம்

    • நேற்று காலை குற்றால தீர்த்தம் எடுத்து வரப்பட்டு கணபதி ஹோமமும், அதனைத்தொடர்ந்து சாஸ்தா மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.
    • கோவிலை வந்தடைந்த சாஸ்தாவிற்கு சிறப்பு பூஜைகளுடன், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள அருணாபேரியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோவிலான மரத்தடி மேகம் திரை கொண்ட சாஸ்தா கோவிலில் ஆடி மாத திருவிழா வெகு விமர்சையாக கொண்டா டப்பட்டது.

    ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் 3-வது புதன்கிழமை தொடங்கி 2 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா நேற்று காலை 9 மணி அளவில் குற்றால தீர்த்தம் எடுத்து வரப்பட்டு கணபதி ஹோமமும், அதனைத்தொடர்ந்து சாஸ்தா மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மாலையில் கீழப்பாவூரில் இருந்து குதிரை வாகனத்தில் சாஸ்தா அதாவது மண்ணால் செய்யப்பட்ட குதிரை மற்றும் சாஸ்தா வாகனம் பக்தர்களால் தோழில் சுமந்து ஊர்வலமாக அருணாபேரி கிராமத்திற்கு எடுத்து வரப்பட்டு அங்குள்ள முத்தாரம்மன் கோவிலில் பூஜை நடை பெற்ற பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக சாஸ்தா கோவிலை நோக்கி கொண்டு வரப்பட்டது.

    வழி நெடுகிலும் நின்று பக்தர்கள் சாஸ்தாவிற்கு மாலை அணிவித்து சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் கோவிலை வந்தடைந்த சாஸ்தாவிற்கு சிறப்பு பூஜைகளுடன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. காலையில் சிறப்பு பூஜைகளுடன் கிடா வெட்டும் நிகழ்ச்சி நடை பெற்றது.

    விழாவில் பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    பொதுமக்களின் பாதுகாப்பு கருதி 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    Next Story
    ×