search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியலை  பழனிநாடார் எம்.எல்.ஏ. வெளியிட்டார்
    X

    நிர்வாகிகள் பட்டியலை பழனிநாடார் எம்.எல்.ஏ. வெளியிட்டபோது எடுத்தபடம்.


    தென்காசி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியலை பழனிநாடார் எம்.எல்.ஏ. வெளியிட்டார்

    • தென்காசி மாவட்ட பொருளாளராக முரளி ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    • 16 வட்டார தலைவர்கள், 15 மாவட்ட அமைப்பு செயலாளர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    சுரண்டை:

    தென்காசி மாவட்ட காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் பட்டியலை மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனிநாடார் எம்.எல்.ஏ. வெளியிட்டார்.

    அதன்படி மாவட்ட பொருளாளராக முரளி ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். மாவட்ட துணைத் தலைவர்களாக கோமதிநாயகம், வள்ளி முருகன், மெடிக்கல் கந்தன், காதர் மைதீன், பாவநாசம், சமுத்திரம், பால் என்ற சண்முகவேல், மணி, முகம்மது உசேன், ஆதிமூலம், சிவராமகிருஷ்ணன், வைகைகுமார் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    நகர தலைவர்களாக தென்காசி மாடசாமி ஜோதிடர், கடையநல்லூர் சுந்தரபாண்டியன், சுரண்டை ஜெயபால், செங்கோட்டை ராமர், சங்கரன்கோவில் உமாசங்கர், புளியங்குடி பால்ராஜ், செயற்குழு உறுப்பினர்களாக குமரேசன், ராமராஜ், ராமமூர்த்தி,அருள் முருகன், சங்கரலிங்கம், ஜவஹர்லால் நேரு, மாரிமுத்து, ராமர், சுதா, ராஜபாண்டி, பீர்முகமது, தங்கராஜ், பழனிச்சாமி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    மேலும் 16 வட்டார தலைவர்கள், 15 மாவட்ட அமைப்பு செயலாளர்கள், 12 மாவட்ட செயலாளர்கள், 11 பொதுச் செயலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் 2024 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ராகுல் காந்தியை பிரதமராக்க கடுமையாக உழைக்க வேண்டும் என பழனி நாடார் எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டார்.

    Next Story
    ×