search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாவூர்சத்திரம் அருகே காதலிப்பதாக கூறி மாணவிக்கு பாலியல் தொல்லை- வாலிபர் கைது
    X

    பாவூர்சத்திரம் அருகே காதலிப்பதாக கூறி மாணவிக்கு பாலியல் தொல்லை- வாலிபர் கைது

    • அஜித்தின் செல்போன் சிக்னலை வைத்து வெளியூரில் தலைமறைவாக இருந்த 2 பேரையும் அழைத்து வந்தனர்.
    • பாவூர்சத்திரம் போலீசார் இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டதில் மாணவிக்கு, அஜித்குமார் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள முத்துமாலைபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அஜித்குமார்(வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது மதிக்கத்தக்க மாணவி ஒருவரை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி வெளியூருக்கு அழைத்து சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் அஜித் குறித்து பாவூர்சத்திரம் போலீசில் புகார் அளித்தனர்.

    புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், அஜித்குமார் மாணவியை வெளியூருக்கு அழைத்து சென்றது உறுதி செய்யப்பட்டது. அஜித்தின் செல்போன் சிக்னலை வைத்து வெளியூரில் தலைமறைவாக இருந்த 2 பேரையும் அழைத்து வந்தனர்.

    பின்னர் பாவூர்சத்திரம் போலீசார் இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டதில் மாணவிக்கு, அஜித்குமார் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. உடனடியாக பாவூர்சத்திரம் போலீசார் அஜித்குமார் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×