search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் அருகே பிளஸ்-2 மாணவனை காதலித்து கடத்தி சென்ற இளம்பெண் போக்சோவில் கைது
    X

    திருப்பூர் அருகே பிளஸ்-2 மாணவனை காதலித்து கடத்தி சென்ற இளம்பெண் போக்சோவில் கைது

    • திருமண ஆசைகாட்டி பிளஸ்-2 மாணவரை இளம்பெண் கடத்தி சென்ற சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி மாணவன் எங்கு சென்றார், யாராவது கடத்தி சென்றார்களா என்று விசாரணை நடத்தினர்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த 17 வயதான மாணவர் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். விடுமுறை நாட்களில் ஊருக்கு வந்து சென்றுள்ளார்.

    அப்போது வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த காயத்ரி (வயது 24) என்ற இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர்.

    கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஊருக்கு வந்த மாணவர், அதன்பிறகு பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். ஆனால் அந்த மாணவர் பள்ளிக்கு செல்லவில்லை. இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் மாணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கவே அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே மாணவனை உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து வெள்ளகோவில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி மாணவன் எங்கு சென்றார், யாராவது கடத்தி சென்றார்களா என்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த மாணவனும், காயத்ரியும் காதலித்து வந்ததுடன் , காயத்ரியும் வீட்டில் இருந்து மாயமானது தெரிந்தது.

    இதையடுத்து இருவரும் எங்கு சென்றார்கள் என்று விசாரணை நடத்தி போலீசார் அவர்களை தேடி வந்தனர். அப்போது அவர்கள் ஓசூரில் தனியாக வீடு எடுத்து தங்கி, அங்கு கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் ஓசூர் சென்று 2பேரையும் மீட்டு வெள்ளகோவிலுக்கு அழைத்து வந்தனர். அங்கு காயத்ரியிடம் விசாரணை நடத்திய போது, திருமண ஆசைகாட்டி மாணவனை கடத்தி சென்றது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காயத்ரியை கைது செய்தனர். மாணவரை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். திருமண ஆசைகாட்டி பிளஸ்-2 மாணவரை இளம்பெண் கடத்தி சென்ற சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×