search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் விடுதியில் விபசாரத்தில் ஈடுபட்ட அழகி மீட்பு- மேலாளர் கைது
    X

    திருப்பூர் விடுதியில் விபசாரத்தில் ஈடுபட்ட அழகி மீட்பு- மேலாளர் கைது

    • ஒரு அறையில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 24 வயது அழகியை வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.
    • அழகியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் வளர்மதி பஸ் நிறுத்தம் அருகே உள்ள விடுதியில் விபசாரம் நடப்பதாக திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் அந்த லாட்ஜில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஒரு அறையில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 24 வயது அழகியை வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அந்த அழகியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    மேலும் விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக அந்த விடுதியின் மேலாளரான தேனியை சேர்ந்த தமிழரசுவை (வயது 26) போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×