search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 60 அடியாக சரிந்தது
    X

    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 60 அடியாக சரிந்தது

    • அணைக்கு வினாடிக்கு 26 கனஅடியாக நீர் குறைந்து வருகிறது.
    • காளிங்கராயன் பாசனத்திற்கு 100 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாகவே மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. அதேநேரம் அணைக்கு வரும் நீர்வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 60.69 அடியாக குறைந்துள்ளது. கடந்த 8 நாட்களில் மட்டும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 8 அடிவரை சரிந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 26 கனஅடியாக நீர் குறைந்து வருகிறது.

    கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2,300 கனஅடி நீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று ஆயிரம் கனஅடியாக குறைத்து திறக்கப்பட்டுள்ளது. காளிங்கராயன் பாசனத்திற்கு 100 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 800 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 2000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 39. 19 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 2.02 அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 29.22 அடியாகவும் குறைந்து உள்ளது.

    Next Story
    ×