search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலாஜாபாத் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
    X

    வாலாஜாபாத் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

    • சரியான நேரத்தில் ரோந்து போலீசார் வந்ததால் ஏ.டி.எம்.மையத்தில் இருந்த பணம் தப்பியது.
    • வாலாஜாபாத் அருகே மீண்டும் ஏ.டி.எம். எந்திரத்தை மர்மகும்பல் உடைக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சிபுரம்:

    வாலாஜாபாத் அருகே உள்ள திம்மராஜம் பேட்டையில் காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் தனியார் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று நள்ளிரவு ஏ.டி.எம்.மையத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் எந்திரத்தை கடப்பாரையால் உடைத்தனர்.

    அந்த நேரத்தில் அவ்வழியே ரோந்து போலீசார் வந்தனர். உடனே கொள்ளைகும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். சந்தேகம் அடைந்த போலீசார் ஏ.டி.எம்.மையத்துக்குள் சென்று பார்த்தபோது எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், டி.எஸ்.பி. ஜூலியட் சீசர் மற்றும் போலீசார்விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    சரியான நேரத்தில் ரோந்து போலீசார் வந்ததால் ஏ.டி.எம்.மையத்தில் இருந்த பணம் தப்பியது. கொள்ளைகும்பலை பிடிக்க போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் அடுத்தடுத்து நடந்த ஏ.டி.எம். கொள்ளை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வாலாஜாபாத் அருகே மீண்டும் ஏ.டி.எம். எந்திரத்தை மர்மகும்பல் உடைக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×