search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொக்கை வாய் சிரிப்பால் மனதை கவர்ந்த வேலம்மாள் பாட்டி காலமானார்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பொக்கை வாய் சிரிப்பால் மனதை கவர்ந்த வேலம்மாள் பாட்டி காலமானார்

    • வயது முதிர்வு காரணமாக கடந்த சில நாட்களாக வேலம்மாள் பாட்டி உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.
    • வேலம்மாள் பாட்டி உடலுக்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களும் மலர் அஞ்சலி செலுத்தினர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் புத்தேரி அருகே கீழகலுங்கடி பகுதியை சேர்ந்தவர் வேலம்மாள் (வயது 92). இவர் தமிழக அரசு கொரோனா ஊரடங்கின்போது வழங்கிய ரூ.2000 பணம் மற்றும் மளிகை பொருட்கள் வாங்கியபோது தனது பொக்கை வாய் சிரிப்பால் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

    இதன் மூலமாக வேலம்மாள் பாட்டி பிரபலம் அடைந்தார். இந்த நிலையில் குமரி மாவட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தபோது அவரை சந்தித்து தனக்கு வீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கையை ஏற்று அஞ்சுகிராமம் அருகே பால்குளம் பகுதியில் அவருக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இருப்பினும் பாட்டி அங்கு செல்லாமல் கீழக்கலுங்கடி பகுதியில் வசித்து வந்தார். வயது முதிர்வு காரணமாக கடந்த சில நாட்களாக வேலம்மாள் பாட்டி உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று இரவு அவர் காலமானார். அவரது உடலுக்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களும் மலர் அஞ்சலி செலுத்தினர்.

    Next Story
    ×