என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
முல்லைப்பெரியாறு அணைக்கு பாதிப்பு ஏற்பட்டால் மீண்டும் போராட்டத்தில் குதிப்பேன்- வைகோ ஆவேச பேச்சு
- புதிய அணை கட்டினால் தமிழகத்திற்கு வரக்கூடிய தண்ணீர் வராது.
- தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்கு மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பத்தில் நடந்த ம.தி.மு.க. நிர்வாகியின் இல்ல திருமணத்தில் வைகோ கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது,
கம்பத்துக்கும் எனக்கும் மிகப்பெரிய தொடர்பு உண்டு. 678 கிராமங்களில் தான் முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்டுவதற்கு கேரள அரசு எடுத்த முயற்சிகளை தடுப்பதற்காக தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தி உள்ளேன்.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை, நியூட்ரினோ திட்டம் ஆகியவற்றுக்காக இடைவிடாது உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், நடைபயணம் உள்ளிட்ட கம்பம் மக்களின் நலன் சார்ந்த பிரச்சினைகளுக்காக பாடுபட்டுள்ளேன். மேலும் தற்போது கேரளாவைச் சார்ந்த அமைச்சர் ஒருவர் முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்ட வேண்டும் என்று கருத்தினை கூறி வருகிறார்.
அவ்வாறு புதிய அணை கட்டினால் தமிழகத்திற்கு வரக்கூடிய தண்ணீர் வராது. 5 மாவட்டங்கள் பாலைவனமாகும். அதேபோன்று தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்கு மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதனை தடுப்பதற்கு தென்மாவட்டம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டேன்.
இந்த நியூட்ரினோத் திட்டம் செயல்பட்டால் அம்பரப்பர் மலைக்கு மட்டும் ஆபத்தல்ல. அருகில் உள்ள இடுக்கி அணைக்கும், முல்லைப் பெரியாறு அணைக்கும் பெரும் ஆபத்து ஏற்படும்.
எனவே நியூட்ரினோ பிரச்சினைக்காகவும், முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்கவும் நான் மீண்டும் வருவேன். மக்களை சந்திப்பேன். விவசாயிகளுடன் சேர்ந்து அதனை தடுப்பதற்கான போராட்டத்தில் ஈடுபடுவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்