மீஞ்சூரில் 163 செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி

மீஞ்சூரில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் உதவி இயக்குனர் கோபி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.முகாமில் 163 செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது
மீஞ்சூரில் 163 செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி
Published on

பொன்னேரி:

மீஞ்சூரில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் உதவி இயக்குனர் கோபி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது இதில் சார்பு ஆட்சியர் ஐஸ்வர்யா, பேரூர் தலைவர் ருக்குமணி மோகன்ராஜ் கலந்து கொண்டு செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியினை தொடங்கி வைத்தார்.

இதில் ஏராளமானபேர் கலந்து கொண்டு தங்களது செல்லப் பிராணிகளான நாய், பூனை ஆகியவற்றுக்கு தடுப்பூசி செலுத்தினர், இது குறித்து கால்நடை மருத்துவர்கள் கூறுகையில் வீட்டில் வளர்க்கப்படும் நாய், பூனை, மற்றும் கால்நடைகளுக்கு நோய் தொற்று பரவாமல் இருக்க தடுப்பூசி செலுத்துவது அவசியம், குறிப்பாக நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தாவிட்டால் பிற நாய்களிடமிருந்து வளர்ப்பு நாய்களுக்கு ஏற்படும் நோய் தொற்றானது மனிதர்களுக்கும் பரவும் அபாயம் இருப்பதாக தெரிவித்தனர். முகாமில் 163 செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com