திருப்பூரில் கொட்டித்தீர்த்த மழை: சூறாவளி காற்றால் 2 ஆயிரம் வாழை மரங்கள் நாசம்

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறதுஅனைத்து வாழைகளும் நன்கு விளைந்து குலை தள்ளிய நிலையில் இருந்தன.
திருப்பூரில் கொட்டித்தீர்த்த மழை: சூறாவளி காற்றால் 2 ஆயிரம் வாழை மரங்கள் நாசம்
Published on

திருப்பூர்:

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கொங்குமண்டலமான கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

இந்நிலையில் நேற்று திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. மழையின் போது பல்வேறு பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசியது.

மாவட்டத்தில் இன்று காலை 7 மணி நிலவரப்படி திருப்பூர் வடக்கு பகுதியில் 2 மி.மீ.,குமார்நகர் பகுதியில் 1 மி.மீ., திருப்பூர் தெற்கு பகுதியில் 13 மி.மீ., பல்லடம் ரோடு பகுதியில் 2 மி.மீ., ஊத்துக்குளியில் 12 மி.மீ., மடத்துக்குளத்தில் 5 மி.மீ., குண்டடத்தில் 6 மி.மீ., உப்பாறு அணைப்பகுதியில் 17 மி.மீ., உடுமலையில் 14.10 மி.மீ., அமராவதி அணைப்பகுதியில் 16 மி.மீ., பல்லடத்தில் 3 மி.மீ., என மொத்தம் 91.10 மி.மீட்டர் மழைப்பதிவானது. இதன் சராசரி 4.55 மி.மீ., ஆகும்.

இதற்கிடையே திருப்பூரை சேர்ந்த கணேசன் (வயது 59) என்பவர் நல்லூர் மணியக்காரம்பாளையத்தில் 4 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதில் வாழை பயிரிட்டிருந்தார். அனைத்து வாழைகளும் நன்கு விளைந்து குலை தள்ளிய நிலையில் இருந்தன.

நேற்று மாலை திடீரென வீசிய சூறாவளி காற்றின் காரணமாக 4 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 2 ஆயிரம் வாழை மரங்களும் முறிந்து நாசமாகின. இதன் மதிப்பு ரூ.14 லட்சம் என தெரிவித்த கணேசன், மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு தனக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com