திட்டக்குடியில் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் விற்றவர் கைது

திட்டக்குடியில் அரசால் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

திட்டக்குடி:

திட்டக்குடி நகராட்சியில் பல்வேறு கடைகளில் தொடர்ந்து அரசால் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் திட்டக்குடி குற்றப்பிரிவு போலீசார் திருமஞ்சனம் தெருவில் உள்ள பாலமுரளி ( வயது 46) என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் சோதனை செய்தனர். 

மேலும் இவருக்கு சொந்தமான மற்றோரு மளிகை கடையிலும் சோதனை நடத்தினர். அப்போது அங்கு அரசால் தடைசெய்யப்பட்ட 20 பாக்கெட் போதை பொருட்கள் விற்பனைக்காக வைத்திருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். தொடர்ந்து பாலமுரளியை திட்டக்குடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து திட்டக்குடி சப்-இன்ஸ்பெக்டர் பாக்யராஜ் வழக்கு பதிவு செய்து பால முரளியை கைது செய்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com