தென்பெண்ணை ஆற்றில் குளித்த போது பரிதாபம்: தாயின் கண் முன்னே ஆற்றில் மகன் மூழ்கி பலி

தென்பெண்ணை ஆற்றில் குளித்த போது தாயின் கண் முன்னே மகன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாயின் கண் முன்னே ஆற்றில் மகன் மூழ்கி பலி
தாயின் கண் முன்னே ஆற்றில் மகன் மூழ்கி பலி
Published on

காவேரிப்பட்டணம்:

கிருஷ்ணகிரி நகராட்சியில் பணிபுரிந்து வரும் மாதையன். இவரது மகன் ஹரிராஜ் (வயது17).

இந்த நிலையில் நேற்று ஹரிராஜ், தனது தாயாருடன் திம்மாபுரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் துணி துவைக்க சென்றார்.

அப்போது தென் பெண்ணை ஆற்றில் ஆழமான பகுதிக்கு செல்லாதே என அவரது தாய் கூறினார் ஆனாலும் அவரது பேச்சை கேட்காமல் ஆழமான பகுதியில் சென்று குளித்த ஹரி ராஜ் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். இதை கண்டதும் அவரது தாய் பதறிப்போய் கூச்சலிட்டார். அப்போது அங்கு யாரும் இல்லாததால் ஆற்றில் ஹரி ராஜ் அடித்து செல்லப்பட்டார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கிருஷ்ணகிரி தாசில்தார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவன் ஹரிராஜை தேடும் பணியை தீவிர படுத்தினார். உடனடியாக கிருஷ்ணகிரி தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி தேடினார். அப்போது ஆற்றில் விழுந்த இடத்தில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் இருந்து ஹரிராஜ் உடல் மீட்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஹரிராஜ் உடலை காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டது. இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com