

இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், ஆரம்பாக்கம் கிராமத்தில் உள்ள யாழினி நகர் பகுதி விளை நிலம் என்பதால் அங்கு டாஸ்மாக் கடை திறக்கப் போவதில்லை என்றும் சட்ட விதிகளின்படியே உரிய இடத்தில் அமைக்க அனுமதிக்கப்படும் என்றும் விளக்கமளித்தார்.