search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களக்காடு பகுதியில் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி
    X

    களக்காடு பகுதியில் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி

    • பறவைகளை தொலை நோக்கி கருவிகள் மூலம் கண்டறிந்து, புகைப்படமாகவும் பதிவு செய்தனர்.
    • பறவைகள் வாழும் குளத்தின் தன்மை, நீரின் தன்மை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது.

    களக்காடு வனசரகர் பிரபாகரன் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், வனத்துறை ஊழியர்கள் குடிதாங்கிகுளம், பத்மநேரி குளம், கங்கணாங்குளம், சிங்கிகுளம் மற்றும் பச்சையாறு அணை பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தினர்.

    பறவைகளை தொலை நோக்கி கருவிகள் மூலம் கண்டறிந்து, புகைப்படமாகவும் பதிவு செய்தனர்.

    கணக்கெடுப்பு பணியுடன் பறவைகள் வாழும் குளத்தின் தன்மை, நீரின் தன்மை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. ஒரு சில குளங்களில் கழிவுநீர் கலப்பதால் பறவைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட குறைந்துள்ளதாகவும், குழுவினர் தெரிவித்தனர்.

    கணக்கெடுப்பு பணிகள் முடிவடைந்தவுடன் எத்தனை பறவைகள் உள்ளன என்பது குறித்தும், அரிய வகை பறவைகள் குறித்தும் வனத்துறை அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×