search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் அருகே தண்டவாளத்தின் நடுவே கல் இரும்பு ராடு வைத்த மர்ம கும்பல்- எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க சதி
    X

    சேலம் அருகே தண்டவாளத்தின் நடுவே கல் இரும்பு ராடு வைத்த மர்ம கும்பல்- எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க சதி

    • சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள திண்ணப்பட்டியில் ரெயில் நிலையம் அமைந்துள்ளது.
    • குற்றவாளிகளை கண்டுபிடிக்க சைபர் கிரைம் போலீசாரும் களத்தில் இறங்கி உள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள திண்ணப்பட்டியில் ரெயில் நிலையம் அமைந்துள்ளது. இங்கு கேரளாவில் இருந்து கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக சென்னை மற்றும் வட மாநிலங்களுக்கு செல்லும் ரெயில் தடம் உள்ளது. மேலும் மதுரை, திருநெல்வேலி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ரெயில்களும் இந்த வழியாக சென்று வருகின்றன.

    குறிப்பாக வட மாநிலங்களில் இருந்து தென் மாநிலங்களை இணைக்கும் ரெயில் பாதை என்பதால் ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான எக்ஸ்பிரஸ், பயணிகள் ரெயில்கள் வந்து, செல்கின்றன.

    ெரயில் தடமாற்றி தண்டவாளத்தில்...

    இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் தின்னப்பட்டி ரெயில் நிலையம் அருகே உள்ள முள்ளிசெட்டிபட்டி இடையே ரெயில் தடம் மாற்றியில் இடையே கற்களை வைத்துள்ளனர். தொடர்ந்து மற்றொரு தண்டவளத்தில் இரும்பு ராடுகளை எடுத்து தண்டவாளத்தின் குறுக்கே வைத்து விட்டு சென்றுள்ளனர்.

    இதை தொடர்ந்து அவ்வழி வந்த உள்ளூர் பகுதியை சேர்ந்த ஒருவர் பார்த்துவிட்டு ரெயில் நிலையத்திலிருந்த பாயிண்ட் மேன் அருண் என்பவரிடம் தகவல் தெரிவித்தார். உடனடியாக அங்கு சென்ற பாயிண்ட் மேன் அருண் கற்களையும் இரும்புத் ராடையும் அப்புறப்படுத்தினார்.

    இதில் தடமாற்றம் செய்யும் யார்டு பகுதியில் இடையே கற்கள் அகற்ற முடியாத அளவுக்கு வைத்திருந்தால் அவற்றை அகற்ற சிரமம் ஏற்பட்டது. கடின முயற்சிக்கு பிறகு அந்த கற்கள் முழுவதும் அங்கிருந்து அகற்றப்பட்டது.

    கற்கள் மற்றும் இரும்பு ராடு வைத்த சமயத்தில் அந்த வழியாக ரெயில் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த தீவட்டிப்பட்டி போலீசார் மற்றும் சேலம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ரெயில்களை தடமாற்றம் செய்யும் யார்டு பகுதியில் இடையே கற்கள் வைத்திருந்ததால் ரெயிலை கவிழ்க்க மிகப்பெரிய சதி நடந்திருப்பது தெரியவந்துள்ளது. தண்டவாளம் நடுவே கல் மற்றும் இரும்பு ராடுகளை வைத்த மர்ம கும்பல் யார் ? என கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளை போலீஸ் உயர் அதிகாரிகள் எடுத்துள்ளனர். அவர்கள் தண்டவாளம் ஒட்டியுள்ள பகுதியில் உள்ள குடியிருப்புகளில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களில் மர்ம கும்பல் உருவம் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

    இந்த சம்பத்தை அடுத்து சேலம் மாநகர் போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹேதா, துணை கமிஷனர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோரும் நேரடியாக விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்க சைபர் கிரைம் போலீசாரும் களத்தில் இறங்கி உள்ளனர்.

    உள்ளூர் பகுதியை சேர்ந்த நபர் சரியான நேரத்தில் தகவல் தெரிவித்ததால் அவருக்கு பொதுமக்கள் மற்றும் ரெயில்வே ஊழியர்கள், போலீசார் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    Next Story
    ×