பொன்னேரி அருகே லாரி டிரைவரை தாக்கி பணம் பறிப்பு

பொன்னேரி அருகே லாரி டிரைவரை தாக்கி பணம் பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணம் பறிப்பு (கோப்பு படம்)
பணம் பறிப்பு (கோப்பு படம்)
Published on

பொன்னேரி:

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் இர்பான். லாரி டிரைவர். இவர் லாரியில் வளர்ப்பு மீன் குஞ்சுகளைஏற்றிக் கொண்டு பொன்னேரி அடுத்த குண்ண மஞ்சேரி அருகில் அதிகாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது 2 மர்ம வாலிபர்கள் கத்திமுனையில் டிரைவர் இர்பானை மிரட்டி ரூ. 6 ஆயிரத்தை பறித்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மீஞ்சூரை அடுத்த தோட்டக்காடு பகுதியை சேர்ந்தவர் விஷ்ணுவை கைது செய்தனர். அவரது கூட்டாளியான நெய்தவாயல் பகுதியை சேர்ந்த ஒருவரை தேடிவருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com