என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கல்லாவி அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.24.80 லட்சம் மோசடி செய்தவர் கைது
- போலீசார் வழக்குபதிவு செய்து அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய ஒட்டப்பட்டியை சேர்ந்த புஸ்பலிங்கம் என்பவரை கைது செய்தனர்.
- கைதான அவரை ஊத்தங்கரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள கழுதைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் எம்.எஸ்.சி. படித்து முடித்துள்ளார்.
இந்த நிலையில் அரசு பள்ளியில் ஆசிரியர் வேலைக்காக பல்வேறு முயற்சிகளும் எடுத்து வந்தார்.
அப்போது தருமபுரி அருேக ஒட்டப்பட்டியை சேர்ந்த புஸ்பலிங்கம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவரிடம் எப்படியாவது எனக்கு அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வேண்டும் என கூறியுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரிடம் இருந்து புஸ்பலிங்கம் 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.24.80 லட்சம் பணம் வாங்கியுள்ளார். ஆனால் இதுவரை எந்த ஒரு அரசு பள்ளியில் ஆசிரியர் வேலையும் கிடைக்கவில்லை.
இதனால் தான் ஏமாற்றம் அடைந்தது தெரியவந்தது. இது பற்றி அவரிடம் ராமச்சந்திரன் நான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கூறியுள்ளார். ஆனால் அவர் பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
இது குறித்து ராமசந்திரன் கல்லாவி போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய ஒட்டப்பட்டியை சேர்ந்த புஸ்பலிங்கம் என்பவரை கைது செய்தனர். கைதான அவரை ஊத்தங்கரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்