என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பெரணமல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து செல்போன் நிறுவன ஊழியர் பலி
- தீயணைப்புத் துறையினர் கிணற்றில் இறங்கி ஜெகதீசனை தேடினர். அப்போது ஜெகதீசனை பிணமாக மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேத்துப்பட்டு:
சென்னை டி.பி சத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 28). இவர் தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் இவரது தாத்தா இறந்து விட்டதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஜெகதீசன் தனது குடும்பத்தினருடன் திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த சென்னந்தல் கிராமத்திற்கு வந்தார்.
நேற்று மாலை ஜெகதீசன் தவணி மேட்டூர் சாலையில் உள்ள விவசாய கிணற்றின் அருகே அமர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது.
அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்து விட்டார். நீண்ட நேரம் ஆகியும் ஜெகதீசன் வீடு திரும்பாததால் அவரது தந்தை மற்றும் உறவினர்கள் தேடி பார்த்தனர்.
கிணற்றின் அருகே ஜெகதீசன் செருப்பு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து பெரணமல்லூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் இறங்கி ஜெகதீசனை தேடினர். அப்போது ஜெகதீசனை பிணமாக மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
பின்னர் அவரது உடலை ஆரணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த பெரணமல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்