search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊரப்பாக்கத்தில் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி 2 என்ஜினீயர்கள் பலி
    X

    ஊரப்பாக்கத்தில் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி 2 என்ஜினீயர்கள் பலி

    • ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையில் வந்து கொண்டு இருந்தபோது அங்கு சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது.
    • ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையில் வந்து கொண்டு இருந்தபோது அங்கு சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது.

    வண்டலூர்:

    தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜ்குமார் (வயது 27), வினோத்(26). என்ஜினீயர்களான இருவரும் நண்பர்கள். அவர்கள் சென்னை துரைப்பாக்கம் பகுதியில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.

    கடந்த 12-ந்தேதி இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றனர். பின்னர் அவர்கள் நேற்று இரவு சென்னை நோக்கி திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

    நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் கூடுவாஞ்சேரி அடுத்த ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையில் வந்து கொண்டு இருந்தபோது அங்கு சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த லாரி மீது மோதியது. இதில் நணபர்கள் ராஜ்குமார், வினோத் ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிய 2 பேரையும் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி ராஜ்குமாரும், வினோத்தும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் நண்பர்கள் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×