search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 குழந்தைகளின் தாய் தற்கொலை- கணவர் மீதான சந்தேகத்தால் விபரீதம்
    X

    2 குழந்தைகளின் தாய் தற்கொலை- கணவர் மீதான சந்தேகத்தால் விபரீதம்

    • பாலகுமார், வேறு பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக தமிழ்ச்செல்விக்கு சந்தேகம் ஏற்பட்டது.
    • மனமுடைந்த தமிழ்ச்செல்வி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நாமக்கல்:

    நாமக்கல் கொசவம்பட்டியை சேர்ந்தவர் பாலகுமார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி (வயசு 35). இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

    இந்த நிலையில் பாலகுமார், வேறு பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக தமிழ்ச்செல்விக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் மனமுடைந்த தமிழ்ச்செல்வி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். பின்னர் சம்பவம் குறித்து நாமக்கல் நகர போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×