search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோட்டார்சைக்கிள் திருட்டு வழக்கில் மகன்களை போலீசார் கைது செய்ததால் தாய் தற்கொலை
    X

    மோட்டார்சைக்கிள் திருட்டு வழக்கில் மகன்களை போலீசார் கைது செய்ததால் தாய் தற்கொலை

    • சீனிவாசன் மதுபோதையில் வீட்டுக்கு வந்தார். இதனால் கணவன் -மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
    • தற்கொலை குறித்து வெள்ளவேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    பூந்தமல்லி அடுத்த கொத்தியம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி அமுதா (40). இவரது 2 மகன்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கு தொடர்பாக வெள்ளவேடு போலீசார் கைது செய்தனர்.

    இதற்கிடையே சீனிவாசன் மதுபோதையில் வீட்டுக்கு வந்தார். இதனால் கணவன் -மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. மகன்கள் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில் கணவரும் மதுகுடித்து வந்தால் மனவேதனை அடைந்த அமுதா விட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து வெள்ளவேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×