என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பவானி தளவாய்பேட்டையில் பசு மாட்டுடன் பால் உற்பத்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
- பால் உற்பத்தியாளர்கள் தளவாய்பேட்டை பால் சொசைட்டி முன்பாக பசு மாட்டுடன் வருகை தந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- ஆர்ப்பாட்டத்தில் எந்த விதமான அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு பவானி மற்றும் ஆப்பக்கூடல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
பவானி:
பால் கொள்முதல் விலை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் அரசுடன் பேசிய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து நேற்று முதல் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், பால் வழங்குவதை நிறுத்தி தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் 2-வது நாளான இன்று காலை பவானி அருகில் உள்ள தளவாய்பேட்டையில் ஈரோடு மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ராஜ் கவுண்டர் தலைமையில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தருவது உள்பட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள் தளவாய்பேட்டை பால் சொசைட்டி முன்பாக பசு மாட்டுடன் வருகை தந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் எந்த விதமான அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு பவானி மற்றும் ஆப்பக்கூடல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்