சங்கராபுரம் அருகே கஞ்சா வியாபாரி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபடும் அந்தோணிசாமியை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி போலீசார் குற்றவாளியை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
கைது
கைது
Published on

கள்ளக்குறிச்சி:

கடந்த மார்ச் மாதம் 28-ந் தேதி சங்கராபுரம் அருகே அருளம்பாடி கிராமத்தை சேர்ந்த பாபு என்கிற அந்தோணிசாமி என்பவர் அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்யும் போது மூங்கில்துறைப்பட்டு காவல்துறையினரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து சுமார் 14 கிலோ எடையுள்ள கஞ்சா கைப்பற்றப்பட்டது.

இவர் மீது ஏற்கனவே மூங்கில்துறைப்பட்டு காவல் நிலையத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பொருட்களை விற்பனை செய்த பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தொடர்ந்து இதுபோல் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதால் இவர் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபடும் அந்தோணிசாமியை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி போலீசார் குற்றவாளியை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com