ஓடும் பஸ்சில் நூதன முறையில் பயணியிடம் நகை திருட்டு

பஸ் நிலையம் வந்த பொது அந்த 2 பெண்களும் அவசர அவசரமாக பஸ்சில் இருந்து இறங்கி சென்றுள்ளனர். போலீசார் 2 பேர் மீது வழக்கு பதிந்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர்.
ஓடும் பஸ்சில் நூதன முறையில் பயணியிடம் நகை திருட்டு
Published on

மத்தூர்:

கர்நாடக மாநிலம் பெங்களூர் மாவட்டம் டூப்பனஅள்ளி இந்திரா நகரையை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த், இவரது மனைவி சத்யா மற்றும் குழந்தைகளுக்கு பள்ளியின் கோடை விடுமுறையொட்டி சத்யாவின் அம்மா வீடான திருவண்ணாமலையில் குழந்தைகளுக்களை விட்டுவிட்டு மீண்டும் சத்யா, அவரது தங்கை லட்சுமி, கணவர் ஸ்ரீகாந்த் ஆகிய 3 பேரும் நேற்று இரவு திருவண்ணாமலையிலிருந்து பெங்களூர் நோக்கி அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தனர்.

அப்பொழுது மத்தூர் அருகே பஸ் வந்தபோது 2 பெண்கள் சத்யாவின் இருக்கைக்கு பின் உரசியவாறு நின்று கொண்டு கையில் இருந்த காசை 2, 3 முறை கீழே போட்டு எடுப்பது போல் நடித்து வந்தனர்.

இந்நிலையில் மத்தூர் பஸ் நிலையம் வந்த பொது அந்த 2 பெண்களும் அவசர அவசரமாக பஸ்சில் இருந்து இறங்கி சென்றுள்ளனர். இதை சந்தேகித்த சத்யா அவரது பையை பார்த்துள்ளார். அப்பொழுது பையில் இருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள 6 பவுன் தங்க நகை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சத்திய கூச்சலிட்டு அழுதுள்ளார்.

பின்னர் டிரைவர் அந்த பஸ்சை மத்தூர் போலீஸ் நிலையத்திற்கு ஓட்டி சென்றார். இதையடுத்து மத்தூர் போலீசார் சத்திய கூறிய அடையாளத்தின் பெயரில் மத்தூர் பஸ் நிலையத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தனர்.

அதில் 2 பெண்கள் ஊத்தங்கரை செல்லும் பஸ்சில் ஏறி சென்றது தெரிய வந்தது. பின்னர் போலீசார் அந்த பஸ் ஊத்தங்கரை செல்வதற்கு முன்னே சாமல்பட்டி அருகே பஸ்சை நிறுத்தி அதில் பயணித்த 2 பெண்களையும் பிடித்து பரிசோதனை செய்தனர். அப்பொழுது அதில் ஒரு பெண்னின் உள்ளாடையில் தங்க நகை இருந்தது தெரிய வந்தது. பின்னர் நகையை மீட்டு அந்த 2 பெண்களையும் கைது செய்து மத்தூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் ஆந்திர மாநிலம் லட்சுமி புரத்தைச் சேர்ந்த பிரியா மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த கருத்தம்மா என்கிற கார்த்திகா என்பது தெரிய வந்தது. மேலும் இவர்கள் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் பல வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் மத்தூர் போலீசார் 2 பேர் மீது வழக்கு பதிந்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com