உத்திரமேரூர் அருகே ஆம்புலன்சில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது

ஆம்புலன்சில் விரைந்து வந்த ஊழியர்கள் நித்யாவை மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே நித்யாவுக்கு பிரசவ வலி அதிகமானது.
குழந்தை
குழந்தை
Published on

காஞ்சிபுரம்:

உத்திரமேரூர் அருகே உள்ள ஆலஞ்சேரி மதுரா மலைக்காலனி கிராமத்தை சேர்ந்தவர் நித்யா. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு வீட்டில் இருந்த போது திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

இதுகுறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆம்புலன்சில் விரைந்து வந்த ஊழியர்கள் நித்யாவை மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் போகும் வழியிலேயே நித்யாவுக்கு பிரசவ வலி அதிகமானது. இதையடுத்து ஆம்புலன்சில் இருந்த மருத்துவ உதவியாளர் சாம்சுந்தர் மற்றும் ஊழியர்கள் அவருக்கு பிரசவம் பார்த்தனர்.

அப்போது நித்யாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது . பிறகு தாயும், குழந்தையும் சாலவாக்கத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். தற்போது தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com