கொருக்குப்பேட்டை ரெயில் நிலையத்தில் வாலிபரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது

ஆகாசை வழிமறித்து செல்போனை பறித்துக் கொண்டு அவரை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொருக்குப்பேட்டை ரெயில் நிலையத்தில் வாலிபரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது
Published on

கொருக்குப்பேட்டை ஜீவா நகரை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 25). இவர் கடந்த 1-ந் தேதி வேலைக்குச் சென்று வீட்டிற்கு செல்வதற்காக மின்ட்பஸ் நிறுத்தத்தில் இறங்கி கொருக்குப்பேட்டை ரெயில் நிலையத்திற்கு வந்தார். அப்போது பென்சில் பேக்டரி ரெயில்வே தண்ட வாளத்தில் நடந்து சென்ற போது 3 மர்ம வாலிபர்கள் ஆகாசை வழிமறித்து செல்போனை பறித்துக் கொண்டு அவரை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இது பற்றி ஆகாஷ் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா வழக்கு பதிவு செய்து கொருக்குப்பேட்டை ஜீவா நகரை சேர்ந்த சஞ்சய் (23) வண்ணாரப்பேட்டை ஹவுசிங் போர்டை சேர்ந்த ராமச்சந்திரன் (29) ஆகியோரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com