காட்டுமன்னார்கோவில் அருகே குளத்தில் மூழ்கி வாலிபர் பலி

காட்டுமன்னார்கோவில் அருகே குளத்தில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரணம்
மரணம்
Published on

காட்டுமன்னார்கோவில்:

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குருங்குடி புலியடி தெருவைச் சேர்ந்தவர் தமிழ்மணி (வயது 32). சம்பவத்தன்று தமிழ்மணி குருங்குடி அருகே உள்ள அய்யன் குளத்தில் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக தமிழ்மணி குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com