search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காஞ்சிபுரம் அருகே வீட்டில் வாலிபர் மர்ம மரணம்- மனைவி கொன்றதாக பெற்றோர் புகார்
    X

    காஞ்சிபுரம் அருகே வீட்டில் வாலிபர் மர்ம மரணம்- மனைவி கொன்றதாக பெற்றோர் புகார்

    • முனியனின் சாவில் சந்தேகம் அவரது பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
    • வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த சிறுணை கிராமத்தை சேர்ந்தவர் முனியன்.இருங்காட்டு கோட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணி புரிந்து வந்த இவருக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருப்புட்குழியை சேர்ந்த பரிமளா என்பவருடன் பெற்றோர்களின் சம்மதத்துடன் காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

    பரிமளா பாலுசெட்டியிலுள்ள தனியார் துணிக்கடையில் பணிபுரிந்து வந்தார். பரிமளா வேலைக்கு செல்வதில் விருப்பம் இல்லாத அவரது கணவர் முனியனுக்கும் பரிமளாவிற்கும் இடையே அவ்வப்போது பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. தனது சொல் பேச்சை கேட்காத மனைவியின் செயலால் முனியன் மன உளைச்சலில் அவ்வப்போது மது அருந்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

    கடந்த 2-ந் தேதி பரிமளா, முனியன் வீட்டில் வைத்திருத்த 4000 ரூபாயில் 1000 ரூபாயை எடுத்து கொண்டு வேலைக்கு சென்றார். செல்லும் வழியில் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது.

    சிறுணையில் இருந்து பாலுசெட்டி செல்லும் சாலையில் பரிமளாவை வழிமறித்து முனியன் வாக்குவாதத்தில் ஈடுபட பரிமளா தான் வைத்திருந்த பிளேடால் முனியனின் கழுத்தை கிழித்துள்ளார்.இதனையடுத்து முனியன் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். பின்னர் இது குறித்து பாலுசெட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    மேலும் தனது மனைவி வேலைக்கு செல்வதை விரும்பாத முனியன், பரிமளா பணிபுரியக்கூடிய துணிக்கடைக்கு சென்று சண்டையிட்டதால் பரிமளாவை பணியில் இருந்து நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பரிமளா அன்று முதல் முனியனுடன் தொடர்ந்து பிரச்சினை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று மது குடித்துவிட்டு வந்த முனியனுக்கும் பரிமளாவிற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில் முனியனின் பெற்றோர் பணி முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்த போது முனியன் இறந்து விட்டதாக பரிமளா தெரிவித்திருக்கிறார்.

    இதனையடுத்து முனியனின் சாவில் சந்தேகம் அவரது பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் பரிமளா தப்பி ஓடிவிட்டார். சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த பாலுசெட்டி போலீசார் முனியனின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×