search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எழில்மிகு கிராமங்களை உருவாக்க நம்ம ஊரு சூப்பரு சிறப்பு இயக்கம்- கலெக்டர் ஆர்த்தி தொடங்கி வைத்தார்
    X

    எழில்மிகு கிராமங்களை உருவாக்க 'நம்ம ஊரு சூப்பரு' சிறப்பு இயக்கம்- கலெக்டர் ஆர்த்தி தொடங்கி வைத்தார்

    • அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.
    • காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலும் மற்றும் சிறுகாவேரிப்பாக்கம் ஊராட்சியிலும் தூய்மை பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றியங்களில் அடங்கிய 274 கிராம ஊராட்சிகளில் எழில்மிகு கிராமங்களை உருவாக்கிட "நம்ம ஊரு சூப்பரு" சிறப்பு முனைப்பு இயக்கம் வருகிற 1.10.2022 வரை நடைபெறுகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சி காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஆர்த்தி இதனை தொடங்கி வைத்தார்.

    அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.

    காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலும் மற்றும் சிறுகாவேரிப்பாக்கம் ஊராட்சியிலும் தூய்மை பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்.

    பின்னர் ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர்கள், மாவட்ட குழு உறுப்பினர்கள், அனைத்து துறை அலுவலர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுடன் "நம்ம ஊரு சூப்பரு" விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ஆர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது தூய்மை கிராம உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதேவி, மகளிர் திட்ட அலுவலர் செல்வராஜ், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மணிமாறன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன் மற்றும் வரதராஜன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் திவ்ய பிரியா வட்டார மருத்துவ அலுவலர் அருள்மொழி கலந்து கொண்டனர்.

    Next Story
    ×