search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தக்காளியை தொடர்ந்து பச்சை மிளகாய் விலை வரலாறு காணாத உயர்வு
    X

    தக்காளியை தொடர்ந்து பச்சை மிளகாய் விலை வரலாறு காணாத உயர்வு

    • பச்சை மிளகாய் இல்லத்தரசிகளின் கண்களை கசக்கும் அளவுக்கு விலை உயர்ந்துள்ளது.
    • காந்தி மார்க்கெட்டில் இன்று பெங்களூரு பச்சை மிளகாய் கிலோ ரூ.120 க்கு விற்கப்பட்டது.

    திருச்சி:

    நாடு முழுவதும் தக்காளி விலை உயர்ந்துள்ளது. தமிழகத்தில் சில்லறை கடைகளில் கிலோ ரூ. 120 வரை விற்கப்படுகிறது. தற்போது இந்த ட்ரெண்டிங் செய்தி மீம்ஸ்களாக சமூக வலைதளங்களில் ஆக்கிரமித்து வருகின்றன. இல்லத்தரசிகளும் கிலோ கணக்கில் வாங்கிய தக்காளியின் அளவை பெரிதும் குறைத்துக் கொண்டுள்ளனர்.

    திருச்சி காந்தி மார்க்கெட்டில் இன்று தக்காளியின் விலை ரூ.100 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. கத்தரிக்காய் கிலோவுக்கு ரூ. 60, பீன்ஸ் ரூ. 100, கேரட் ரூ.70 மல்லி கட்டு ரூ. 50, புதினா ரூ. 50 விலைக்கு விற்கப்பட்டது. இதற்கிடையே சத்தம் இல்லாமல் பச்சை மிளகாய் இல்லத்தரசிகளின் கண்களை கசக்கும் அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. காந்தி மார்க்கெட்டில் இன்று பெங்களூரு பச்சை மிளகாய் கிலோ ரூ.120 க்கு விற்கப்பட்டது.

    இது வரலாறு காணாத விலை உயர்வு என காந்தி மார்க்கெட் காய்கறி சந்தையின் வியாபாரி கமலக்கண்ணன் தெரிவித்தார். மேலும் அவர் கூறும் போது, முந்தைய காலகட்டங்களில் அதிகப்பட்சமாக ரூ. 60- 70 வரை மட்டுமே பச்சை மிளகாய் விலை உயர்ந்தது. ஆனால் இப்போது ரூ.120 தொட்டுள்ளது. பொதுவாக சமையலில் பச்சை மிளகாயின் பங்களிப்பு சிறிய அளவிலே இருக்கும். பொதுமக்களும் 100 கிராம், 200 கிராம் மட்டுமே வாங்குவார்கள். ஹோட்டல்களுக்கு மட்டுமே அரை கிலோ, ஒரு கிலோ என வாங்குவார்கள். பச்சை மிளகாய் போன்று இஞ்சி விலையும் உச்சம் தொட்டுள்ளது. காந்தி மார்க்கெட்டில் இன்று இஞ்சி ரூ.200க்கு விற்கப்பட்டது. உள்ளூர் பச்சை மிளகாய் வரத்து குறைந்துள்ளதால் கடுமையான விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

    கடந்த 6 மாதத்திற்கு முன்பு பச்சை மிளகாய் ரூ.10-க்கு விற்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மணப்பாறை, துவரங்குறிச்சி பகுதிகளில் மிளகாய் பயிரிட்டவர்கள் அதனை பழுக்க விட்டு காய வைத்து வரமிளகாயாக மாற்றி விற்பனை செய்தனர். இது அவர்களுக்கு அதிக லாபத்தை தருவதாக இருந்தது. காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ள காரணத்தால் விற்பனையும் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.

    Next Story
    ×