search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூரில் போக்குவரத்து விதிமீறிய அரசு-தனியார் பஸ்சுக்கு அபராதம்
    X

    திருவள்ளூரில் போக்குவரத்து விதிமீறிய அரசு-தனியார் பஸ்சுக்கு அபராதம்

    • செங்கல்பட்டு நோக்கி சென்ற தனியார் பஸ் மற்றும் அரசு பஸ் இரண்டும் ஒரே சமயத்தில் புறப்பட்டது.
    • போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து விதிமுறை மீறி வந்த தனியார் பஸ்சுக்கு ரூ. 3 ஆயிரமும், அரசு பஸ்சுக்கு ரூ.1000-மும் அபராதமாக விதித்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் செங்கல்பட்டு நோக்கி சென்ற தனியார் பஸ் மற்றும் அரசு பஸ் இரண்டும் ஒரே சமயத்தில் புறப்பட்டது. இந்த இரண்டு பஸ்களின் டிரைவர்களும் யார் முதலில் செல்வது என ஏற்பட்ட போட்டி காரணமாக போக்குவரத்து விதியை மீறி எதிர் திசையில் சென்றனர். இதனால் அப்பகுதியில கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து விதிமுறை மீறி வந்த தனியார் பஸ்சுக்கு ரூ. 3 ஆயிரமும், அரசு பஸ்சுக்கு ரூ.1000-மும் அபராதமாக விதித்தனர்.

    Next Story
    ×