search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை துறைமுகத்தில் கப்பலில் பழுது பார்த்த போது கியாஸ் பைப் வெடித்ததில் தொழிலாளி பலி
    X

    சென்னை துறைமுகத்தில் கப்பலில் பழுது பார்த்த போது கியாஸ் பைப் வெடித்ததில் தொழிலாளி பலி

    • அதிர்ச்சி அடைந்த மற்ற ஊழியர்கள் பலத்த தீக்காயம் அடைந்த ஜோஸ்வா உள்பட 3 பேரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • சென்னை துறைமுகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராயபுரம்:

    ஆயில் ஏற்றிச்செல்லும் எம்.சி.பாட்ரியாட் என்னும் சரக்கு கப்பல் கடந்த மாதம் ஒடிசா மாநில துறைமுகத்துக்கு வந்தது. அந்த கப்பலில் பழுது ஏற்பட்டதை தொடந்து கடந்த மாதம் 31-ந்தேதி சென்னை துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது.

    தனியார் நிறுவனம் மூலம் கப்பலில் பழுது பார்க்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதில் தண்டையார்பேட்டையை சேர்ந்த சகாய தங்கராஜ் (வயது 45) உள்பட ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கப்பலில் இருந்த போல்டை கியாஸ் கட்டர் மூலம் சகாயராஜ் மற்றும் தொழிலாளர்கள் அகற்றினர். அப்போது அருகில் இருந்த கியாஸ் பைப்லைன் மீது பட்டு வெடித்தது.

    இதில் ஊழியர் சகாய தங்கராஜ் உடல் கருகி பலியானார். மேலும் அருகில் இருந்த காசிமேட்டை சேர்ந்த ஜோஸ்வா (24), தண்டையார்பேட்டையை சேர்ந்த ராஜேஷ்(35), ஜீவரத்தினம் நகரை சேர்ந்த புஷ்பலிங்கம் (48) ஆகிய 3 பேரும் உடல் கருகினர்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற ஊழியர்கள் பலத்த தீக்காயம் அடைந்த ஜோஸ்வா உள்பட 3 பேரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை துறைமுகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×